கோண்டாவில் பகுதியில் ரயிலில் மோதுண்டு ஒருவர் சாவு

தொடருந்துடன் மோதுண்டு உயிரிழந்த நபரொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டது.

யாழ்ப்பாணம் கோண்டாவில் தொடருந்து நிலையத்துக்கு அண்மையாகவே சடலம் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சுன்னாகத்தைச் சேர்ந்த எஸ்.சகாயநேசன் (வயது -43) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

இரவு நேரத்  தொடருந்து வந்து  கொண்டிருந்தபோது, தொடருந்து முன்பாக அவர் பாய்ந்து உயிரிழந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment