கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் ஐவர் சாவு

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த பரிதாபச் சம்பவம் சீனாவின் ஷாங்காயில் நேற்று நடந்துள்ளது.

பழைய கார் பழுதுபார்க்கும் ஆலையின் கூரை உடைந்து வீழ்ந்தே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுவரை கட்டட இடிபாட்டுக்குள் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கட்டட இடிபாட்டுக்குள் மேலும் பலர் சிக்கி இருக்கலாம் எனவும் இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த 150 ற்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களை மீட்கும் நடவடிக்கையில் 24 அவசர வாகனங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment