வன்முறையில் ஈடுபட்ட அரச ,தனியார் ஊழியர்கள்!!

வடமேல் மாகாணத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் அரச மற்றும் தனியார் ஊழியர்களும் உள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக அவர்களது நிறுவனத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் சி.சி.டீ.வி. காட்சிகளை வைத்து ஊர்ஜீதப்படுத்தப்பட்டால், அவர்கள் பணியாற்றிய நிறுவனங்களுக்கும் பொலிஸ் நிலையத்தின் ஊடாக விசேட அறிவிப்பொன்றைச் செய்து, அந்நிறுவனத்தின் ஊடாக அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வைக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். 


Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment