இரத்தக்கறை படிந்த சிற்றூர்ந்துடன் ஒருவர் கைது

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்பு கொண்டுள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் இரத்தக்கறை படிந்த சிற்றூர்ந்துடன் பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகளால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கல்முனைகுடி பிரதேசத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டார்.

சந்தேகநபரிடமிருந்து இரத்தக் கறையுடன் கூடிய ஈ.பி.கே.எம் 5059 என்ற இலக்கத் தகடு கொண்ட சிற்றூர்ந்து ஒன்றும் மற்றும் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் புகைப்படங்கள் உள்ளிட்ட தொலைப்பேசியொன்று பொலரிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment