வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு

பொலிஸாரின் தீவிர முயற்சியால்  மரக்கடத்தல் முயற்சி ஒன்று  வவுனியாவில் முறியடிக்கப்பட்டுள்ளது.

வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேயவிக்கிரம தலைமையின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப்பிரிவினருக்கு  மரக்கடத்தல் தொடர்பில்  இரகசியத் தகவல் கிடைத்தது.



இதனையடுத்து, இன்று அதிகாலை ஓமந்தைப் பகுதியிலிருந்து சட்டவிரோதமான முறையில் பெறுமதிமிக்க 11 முதிரைக் குற்றிகளுடன்
டாட்டா ரக வாகனத்தை பொலிஸார் வழிமறித்தனர்.


எனினும் வாகனத்தை நிறுத்தாது சாரதி வேகமாகச் செலுத்தியுள்ளார். 
துரத்திச் சென்ற பொலிஸார் வழிமறித்தபோது வாகனத்தை கைவிட்டு சாரதி தப்பிச் சென்றுள்ளார்.




வாகனத்தின் உதவியாளர்கள் இருவர் உட்பட முதிரைக் குற்றிகளைக் கைப்பற்றிய பொலிஸார் அவர்களை மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்துள்ளனர்.



தப்பிச் சென்ற வாகனச் சாரதியைக் கைது செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment