உலகில் அதிக வயதான நபர் உயிரிழப்பு

உலகில் மிகவும் வயதான நபர் ரஷ்யாவைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

ஜோர்ஜியாவுக்கு அருகிலுள்ள இங்குஷிதியா பிராந்தியத்தைச் சேர்ந்த 8 பிள்ளைகளின் தந்தையான அப்பாஸ் லலியெவ் என்ற இவர் தனது 123 வயதில் உயிரிழந்துள்ளதாகத்  தெரிவிக்கப்படுகிறது.

முதலாம் உலகப் போரில் பணியாற்றிய தனக்கு தனது அதிக வயதைக் காரணம் காட்டி இரண்டாம் உலகப் போரில்  போர் செய்ய அனுமதியளிக்கப்படவில்லை என  அவர் உயிருடன் இருந்தபோது அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

அவரது பிறப்புத் தொடர்பான பதிவுகள் காணாமல் போயுள்ளதால் உலகின் மிகவும் வயதான நபர் என்ற அங்கீகாரத்தைப் பெற முடியாது போயுள்ளதாகக்  கூறப்படுகிறது.

தினசரி 11 மணி நேரம்  உறங்குவதே தனது நீண்ட  ஆயுளின் இரகசியம்  என அப்பாஸ் லலியெவ் குறிப்பிட்டிருந்தார். அவர் 1896 ஆம் ஆண்டு மார்ச் மாதம்  பிறந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment