நீதிமன்றில் ஆஜராக சரத் விஜேசூரியவுக்கு உத்தரவு

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக நீதிமன்றில் ஆஜராகுமாறு பேராசிரியர் சரத் விஜேசூரியவுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டத்தரணி சம்பத் விஜித குமார மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான அனில் வசந்த அல்விஸ் ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு விசாரணைக்காக அவரை எதிர்வரும் ஜூன் மாதம் 21 ஆம் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பேராசிரியர் சரத் விஜேசூரிய சமூக ஊடகங்களின் ஊடாக பல்வேறு முறை நீதிமன்றத்தை அவமதிக்கும் கருத்துக்களை தெரிவித்ததாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் குறித்த நபருக்கு ஏன் தண்டனை வழங்கக்கூடாது என விசாரித்து அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் மனுதாரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment