அறுவை சிகிச்சைக்குப் பின் நலமாக இருக்கிறேன் - பாடகி எஸ்.ஜானகி

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்பட தென்னிந்திய திரைப்படங்களில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளவர், பின்னணி பாடகி எஸ்.ஜானகி. இவர் கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றார்.

அப்போது குளியல் அறையில் வழுக்கி விழுந்துவிட்டார். அவரை மைசூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது வழுக்கி விழுந்ததில் எஸ்.ஜானகிக்கு இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.



அப்போது பேசிய ஜானகி,

கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிந்துவிட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின் நலமாக இருக்கிறேன். வாக்கிங் ஸ்டிக் வைத்துக்கொண்டு நடக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் நலம் பெறுவேன். நான் நலம்பெற பிரார்த்தனையில் ஈடுபட்ட ரசிகர்களுக்கு நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment