ஜாதவ்வுக்குப் பதில் ராயுடுவா

சென்னை அணியின் வீரர்களில் ஒருவரான கேதார் ஜாதவ் நேற்றைய  போட்டியில் காயமடைந்துள்ளதால் இனி எஞ்சியிருக்கும் போட்டிகளில் அவர்  விளையாடமாட்டார் என சென்னை அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் நேற்று பஞ்சாப் அணியுடனான  போட்டியின் பீல்டிங்கின் போது சென்னை அணியின் வீரர் கேதார் ஜாதவ் பந்தைப் பிடிக்க முயற்சித்துள்ளார். இதன்போது, கீழே விழுந்து தோள்பட்டையில் அடிபட்டது. அதனால் அவர் களத்திலிருந்து வெளியேறினார்.

சென்னை அணி குவாலிஃபயருக்கு முன்னேறியுள்ள நிலையில் அணி நிர்வாகம் சார்பாக கேதார் ஜாதவ் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்னும் 20 நாள்களில் உலகக்கோப்பைப் போட்டிகள் ஆரம்பிக்கவுள்ளன. உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் கேதார் ஜாதவ்வும் இடம் பெற்றிருக்கிறார்.

அவருக்கு இன்னும் சில நாள்களில் எக்ஸ் ரே போன்ற பரிசோதனைகள் எடுக்கப்பட்ட பின்னர் அவர் உடல்தகுதி சரிவராத பட்சத்தில் அவர் உலகக்கோப்பைத் தொடரில் இருந்தும் நீக்கப்படலாம் எனத் தெரிகிறது. 

அப்படி அவர் நீக்கப்படும் பட்சத்தில் அவருக்குப் பதிலாக ராயுடு அல்லது பண்ட் உலகக்கோப்பை அணியில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment