சாம்சங் நிறுவனத்தை பின் தள்ளிய சியோமி

சாம்சங் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி இந்திய சந்தையில் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளது சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி. 

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சீன தயாரிப்புக்களின் ஆதிக்கம் 2019 ஆண்டின் முதல் காலாண்டில் மிக வேகமாக அதிகரித்து இருக்கிறது. இந்திய சந்தையில் சுமார் 66% பங்குகளை சீன நிறுவனங்கள் பெற்றுள்ளது. 

இது குறித்து கவுண்ட்டர்பாயின்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய சந்தையில் சியோமி 29% பங்குகளுடன் முதலிடத்திலும் சாம்சங் 23% பங்குகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

ரெட்மி 6ஏ, ரெட்மி நோட் 6 ப்ரோ, ரெட்மி வை2, கேலக்ஸி எம்20 மற்றும் கேலக்ஸி ஏ50 உள்ளிட்டவை  அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களாக இருக்கின்றன.

இதற்கு முன்னர் கவுன்டர்பாய்ண்ட் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் சியோமி நம்பர் 1 இடத்தையும் சாம்சங் தனது இரண்டாம் இடத்தை ஓப்போ, விவோ மற்றும் மைக்ரோமேக்ஸ் நிறுவனங்களுடன் பகிர்ந்துக்கொண்டது என அறிக்கை வெளியிட்டிருந்தது.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment