அம்பாறையில் வெடிபொருள்கள் மீட்பு

அம்பாறை மாவட்டம் , சின்னப்பாலமுனை கடற்கரைப் பகுதியில்  வெடிபொருள்கள் மற்றும் ஸைனட் குப்பியும் இன்று கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.

கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து,  குறித்த பகுதிக்குச் சென்ற கடற்படையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் வெடிபொருள்களை மீட்டனர்.

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஆறு வெடிகுண்டுகள், துப்பாக்கி ரவைகள் சிலவும், ஸைனட் குப்பியும் ஒரு பையினுள் இட்டு  கடற்கரையோரம் வீசப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்புப் படையினரால்  மீட்கப்பட்டது.

 உள்ளுரில் தயாரிக்கப்பட்ட குண்டு என அடையாளம் காணப்பட்ட ஆறு வெடி குண்டுகளில் இரண்டு குண்டுகள்  செயலிழக்கச் செய்யப்பட்டது.

ஏனைய வெடி குண்டுகளையும் சயனைட் குப்பியையும் சில துப்பாக்கி ரவைகளையும் படையினர் மீட்டுச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, இப் பிரதேசத்தை அண்டிய பகுதிகள்   பாதுகாப்புப் படைத் தரப்பினரால் விஷேட தேடுதல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

விடயம் தொடர்பில் பொலிஸாரும் ஏனைய பாதுகாப்புத் தரப்பினரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து, வருகின்றனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment