ஜனாதிபதி முல்லைத்தீவிற்கு பயணம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அவர் எதிர்வரும் 8ஆம் திகதி  முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்காக ஒன்றாக நிற்போம் என்ற நிகழ்ச்சித் திட்டம் எதிர்வரும் 3ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது. இந்தத் திட்டத்திற்கமைய அதிரடி அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்தப் பணிகளை ஆரம்பித்து வைப்பதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்த விஜயத்தின்போது வீட்டுத்திட்டம், வைத்தியசாலைகளைத் தரமுயர்த்தல், கிராம சக்தி, சிறுவர் பாதுகாப்பு எனப் பல திட்டங்களை அவர் ஆரம்பித்து வைக்கவுள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment