விபத்தில் எழுவர் காயம் முல்லைத்தீவில் சம்பவம்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் எழுவர் காயமடைந்துள்ளனர்

கல்வி நிலையத்துக்குச் சென்று திரும்பிய மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டியொன்றும் மோட்டார் சைக்கிளும் மோதியதிலேயே விபத்து ஏற்பட்டதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர்கள் ஒட்டுசுட்டான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்

ஒட்டுசுட்டான் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment