கிரீஸ் பூதத்தின் பின்னணியில் IS பயங்கரவாதிகளே இருந்தார்கள் - சிங்கள ஊடகம் தகவல்

இலங்கையர்களை அச்சுறுத்திய கிரீஸ் பூதத்தின் பின்னணியில் ஐ.எஸ் பயங்கரவாதிகளே இருந்தார்கள் என பாதுகாப்பு பிரிவு கண்டுபிடித்துள்ளனர்.

கிரீஸ் பூதம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் புலனாய்வு வேலையை ஆரம்பிக்கும் போதே பயங்கரவாதி சஹ்ரானின் எழுச்சி ஆரம்பமாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

புதிய அரசாங்கம் 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த போது இராணுவத்தின் பயங்கரவாத சோதனை தொடர்பான நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன.

புலனாய்வு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டமையினால், ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு அது சாதகமான மாறியுள்ளது. இதன் காரணமாக அவர்கள் செயற்பாடுகள் குறித்து தெரியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புலனாய்வு பிரிவினை மேற்கோள் காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment