ஆப்கானிஸ்தானில் தொடரும் மோதல்- 21 தலிபான்கள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள், அரசுப் படைகளுக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு படைகளுக்கு உளவு பார்ப்பதாக கூறி பொதுமக்களையும் சிறைப்பிடித்து துன்புறுத்துகின்றனர். தலிபான்கள் வசம் உள்ள பகுதிகளை மீட்க ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

அவ்வகையில் உருஸ்கான் மாகாணம் சார்சினோ மாவட்டம் மற்றும் திரின் காட் புறநகர்ப்பகுதிகளில் தலிபான்களின் மறைவிடங்கள் மீது, அரசுப் படையினர் விமான தாக்குதல் நடத்தினர். இதில், 14 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 3 பேர் காயமடைந்ததாகவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment