முல்லைத்தீவில் 600 பேருக்கு காணி அனுமதி பத்திரம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 600 பேருக்கு காணி அனுமதி பத்திரங்கள் இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

”நாட்டுக்காக ஒன்றிணைவோம்” நிகழ்ச்சித் திட்டத்தின் இறுதிநாள் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்கேற்றலுடன் இன்று நடைபெற்றது.

இதில் 600 பேருக்கு காணி அனுமதி பத்திரம், ஆயிரத்தி 100 பேருக்கு காணி உறுதி பத்திரம், 13 ஆயிரத்து 643 குடும்பங்களுக்கு சமுர்த்தி உரித்து அனுமதி பத்திரம் என்பன வழங்கப்பட்டன.

நிகழ்வில் அமைச்சர்களான கயந்த கருணாதிலக, தயா கமகே, காமினி ஜயவிக்கிரம பெரேரா, வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன், வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், எம்.ஏ.சுமந்திரன், சிவமோகன் மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment