யாழ். பொது நூலக கல்வெட்டில் பிழை ; மாற்றியமைக்க நடவடிக்கை

யாழ். பொது நூலகத்தின் கல்வெட்டில் காணப்படும் பிழையான வரலாற்றை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.பொது நூலகத்தின் வரலாறானது, குறித்த நூலக வாயில் கல்வெட்டில் பதியப்பட்டுள்ளது. எனினும் அதில் பொறிக்கப்பட்டுள்ள வரலாற்று குறிப்பில் பிழைகள் இருப்பதாக முன்னோர்களும் சபை உறுப்பினர்களும் சுட்டிக்காட்டியதையடுத்து,  பிழையை திருத்தியமைக்க வேண்டுமென மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தின் பிரகாரம் நூலக வரலாற்றில் பிழையான தகவல்கள் குறித்து ஆராய குழுவொன்று அமைக்கப்பட்டு, குறித்த கல்வெட்டில் பிழை உள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது. 

அதற்கமைய நூலக வரலாற்றை திருத்தியமைப்பதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றன.

Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment