முல்லைத்தீவில் குடிதண்ணீர் சுத்திகரிப்பு தொகுதிக்கு அடிக்கல்

முல்லைத்தீவு மாங்குளம் கிராம அலுவலர் வளாகத்தில்  குடிதண்ணீர் சுத்திகரிப்பு தொகுதி ஒன்றுக்கு அடிக்கல் நடப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற நாட்டுக்காக ஒன்றிணைவோம்  வேலைத்திட்டத்தின் கீழ்,   இந்த செயல்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்தினுடைய விசேட நிதி ஒதுக்கீட்டின் ஊடாக 5 லட்சம் ரூபா பெறுமதியில் குடிதண்ணீர் சுத்திகரிப்பு தொகுதி அமைக்கப்படவுள்ளது.

நிகழ்வில், மாங்குளம் கிராம அலுவலர் த.தனபால்ராஜ் , ஜனாதிபதி செயலகத்தின்   உதவிச் செயலர் லலித் பண்டார, ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் த அகிலன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களான மு  முகுந்தகஜன்,  ச சத்தியசுதர்சன் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கிராம மக்கள் கிராமத்தின் வெளிக்கள உத்தியோகத்தர்கள் எனப்  பலரும் கலந்து கொண்டனர்.


























Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment