வவுனியாவிலும் மரம் நடுகை நிகழ்வு

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் இன்று மரக் கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய வடக்கில் ஆயிரம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தின் ஓர் பிரிவாக வவுனியாவில் இன்று 250 மரக்கன்றுகள் நடப்பட்டது.

வவுனியா மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் வனவளத்திணைக்களம், விவசாய திணைக்களம் மற்றும் சுற்றாடல் அபிவிருத்தி அதிகாரசபை இணைந்து மேற்கொண்ட  இந் நிகழ்வு வவுனியா விவசாய பண்ணைக்கு முன்பாக  இடம்பெற்றது.

இதில், வவுனியா மேலதிக மாவட்டச் செயலர் தி.திரேஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதேச செயலர் கா.உயராசா, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் காஞ்சன குமார, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், இராணுவத்தின் 56 படைப்பிரிவு அதிகாரிகள், மாவட்டச் செயலக அதிகாரிகள், விவசாய திணைக்களத்தின் அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், கிராம சேவகர்கள், பொலிஸார் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



































Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment