மோடியை குடைபிடித்து வரவேற்றார் மைத்திரி

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு கொட்டும் மழையிலும் ஜனாதிபதி செயலகத்தில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட பிரதமர் மோடி புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டிருந்தார்.
இதனை அடுத்து ஜனாதிபதி செயலகத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு இசை வாத்தியங்கள் முழங்க சிங்களப் பாரம்பரிய கண்டி நடனத்துடன் பெரும் மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டது.
அங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொட்டும் மழையிலும் அவரை குடை பிடித்து வரவேற்றார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment