வவுனியாவில் தொடர்ந்தும் அகதிகள் இரகசியமாக தங்கவைப்பு

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளின் உண்மை நிலையை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு தரப்பு அனுமதி மறுத்துள்ளது.
வெளிநாட்டு அகதிகள் தொடர்பாக செய்திகளை பெறுவதற்காக இன்று  அதிகாலை ஊடகவியலாளர்கள் முயற்சித்துள்ளனர்.
இதன்போது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் ஊடாக அனுமதி பெற்றுவருமாறு பாதுகாப்புத் தரப்பினர் அவர்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.
நாட்டில் இடம்பெற்ற தாக்குதலையடுத்து நீர்கொழும்பில் தங்கவைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வெளிநாட்டு அகதிகள் வவுனியாவிற்கு இரவோடு இரவாக அழைத்துச் செல்லப்பட்டு பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் இச்செயற்பாட்டிற்கு பல்வேறு அமைப்புக்களிடமிருந்தும் அரசியல்வாதிகளிடமிருந்தும் சமயத்தலைவர்களிடமிருந்தும் எதிர்ப்புக்கள் வெளியாகியிருந்தன.
அதன் பின்னர் அவர்களின் நிலைமைகள் குறித்து விபரங்களைப் பெற்றுக்கொள்வதற்கு ஊடகங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் 10ற்கும் மேற்பட்ட அகதிகள் வவுனியா வைத்தியசாலைக்கு மருத்துவச்சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டிருந்தனர்.
எனவே அகதிகளின் நிலைமைகளை வெளிக்கொண்டுவரும் நோக்கில், இன்று பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப் பகுதிக்குச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு விபரங்களை வழங்காத பாதுகாப்பு தரப்பினர் அவர்களை திருப்பியனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment