வீதியில் கைவிடப்பட்ட கம்பங்கள் அகற்றக் கோரிக்கை

மன்னார் பிரதான பாலப்பகுதியில் பராமரிப்பற்று கைவிடப்பட்ட  கம்பங்கள் மற்றும் தொலைதொடர்பு வயர்களை அகற்றுமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன்னார் தள்ளாடி பகுதியிலிருந்து பிரதான பலத்தை இணைக்கும் விதியின் இரு பக்க கடல் பகுதிகளிலும் சுமார் 25 க்கு மேற்பட்ட தொலைதொடர்பு  கம்பங்கள் உடைந்த நிலையில்  பல வருடங்களாக  காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

குறித்த  கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்கள் மற்றும் தொலைதொடர்பு கம்பங்கள் பொருத்தப்பட்டு விட்டன. எனினும்  பழைய தொலைத் தொடர்புக் கம்பங்கள் மற்றும் தொலைத்தொடர்பு வயர்கள்  அப்படியே கைவிடப்பட்டுள்ளன 

எனவே குறித்த பகுதியில் தேவையற்று காணப்படும் தொலைதொடர்பு கம்பங்கள் மற்றும் மின் கம்பங்களை உரிய தரப்பினர் அகற்றித் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.










Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment