வவுனியாவில் வெடிபொருள்கள் மீட்பு

வவுனியாவில் வெடிபொருட்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக மாமடு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா அட்டமஸ்கட பகுதியிலுள்ள குளத்திற்கு அருகிலுள்ள மரப் பொந்தில் பொதி ஒன்று காணப்படுவதாக இரகசியத் தகவல் ஒன்று பொலிஸாருக்கு கிடைத்துள்ளது.

இதையடுத்து அங்கு சென்ற பொலிஸார்  பொதியை சோதனையிட்டனர். இதன்போது அப் பொதியில் பல வெடிபொருள்கள் காணப்பட்டுள்ளது.

எஸ்.எல்.ஆர் மகசீன் 2, எஸ்.எல்.எல் தோட்டாக்கள் 08, ரி. 56 ரக தோட்டாக்கள் 02, என்பனவே பொதியிலிருந்து மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அப் பகுதியில் வெடிபொருள்கள் எவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ளது இதை யார் கொண்டு வந்தது போன்ற விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்,  கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை நீதிமன்ற அனுமதியுடன் இன்றைய தினம் செயலிழக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும்  தெரிவித்தனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment