உறவுகளைத் தேடுவோர் முல்லையில் மாபெரும் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று முல்லைத்தீவில் கவனவீர்ப்பு போராட்டம் ஒன்றினை  முன்னெடுத்தனர்.

இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்த  மற்றும் கையளித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களுடைய உறவுகளை தேடி முல்லைத்தீவில் இன்று 846 ஆவது நாளாக போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இன்று வரை தமக்கான  தீர்வும் கிடைக்காத நிலையில் இன்றும் முல்லைத்தீவு மாங்குளம் பிரதான வீதியில் தொடர்ச்சியாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற கொட்டகைக்கு முன்பாக இந்த கவனவீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.










Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment