உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னரே பல தாக்குதல்கள் இடம்பெற்றன – சம்பிக்க

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு முன்னர் பல்வேறு பிரதேசங்களில் சில பயங்கரவாதச் செயற்பாடுகள் இடம்பெற்றதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு நாட்டிற்கு பொதுவான சட்டமும் கல்விக் கொள்கையும் அவசியம் எனவும் அதற்கு அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவு அவசியமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குருநாகல் நகர மண்டபத்தில் நேற்று  இடம்பெற்ற தேசிய வழிகாட்டல் நிகழ்ச்சியில்  கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு முன்னர் பல்வேறு பிரதேசங்களில் சில பயங்கரவாதச் செயற்பாடுகள் இடம்பெற்றதாக குறிப்பிட்டார்.
எனினும், இந்த விடயம் குறித்து பொறுப்புக்கூற வேண்டிய தரப்புக்கள் உரிய முறையில் கவனம் செலுத்தவில்லை எனவும் அவர் கூறினார். நாட்டின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு கூடுதலான பங்களிப்பை வெளிநாட்டவர்களே வழங்கியிருப்பதாக குறிப்பிட்ட அவர், பெருந்தொகையான பணம் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
அனைத்து இன மக்களும் நாட்டில் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழல் உருவாக வேண்டுமென்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment