அரசு அலுவலகத்தின் மீது கார்குண்டு தாக்குதல் - 19 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் விரைவில் அதிபர் பதவி மற்றும் பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பல பகுதிகளில் புதிய வாக்காளர்களின் பெயர்களை சேர்க்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கந்தஹார் மாகாணத்துக்குட்பட்ட மரோப் மாவட்டத்தில் அரசு அலுவலகத்தை குறிவைத்து தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நேற்றிரவு கார்குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினர்.
இதில் அந்த அலுவலகத்துக்குள் இருந்த தேர்தல் அதிகாரிகள் 8 பேர் உயிரிழந்தனர். அதே பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படையை சேர்ந்த 11 பேர் உயிரிழந்தனர்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment