அரசியல் படத்தில் கமல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிசியாக இருக்கும் நடிகர் கமல், அடுத்து இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறார். இரு ஆண்டுகளுக்கு முன், அவர் தலைவன் இருக்கிறான் என்ற படத்தில் நடிக்கப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால், அந்தப் படம் உடனடியாக எடுக்கப்படவில்லை. கிடப்பில் போடப்பட்டிருந்தது.

தற்போது, அந்தப் படத்தை எடுக்க முடிவெடுத்திருக்கின்றனர். இந்தப் படத்தில் கதாநாயகன், வில்லன் என இரு கேரக்டர்களில் கமல் நடிக்கவிருக்கிறார். முழுக்க முழுக்க அரசியல் சம்பந்தப்பட்ட கதையம்சம் உள்ள படம் என்பதால், முழுநேர அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தனக்கு, தற்போது இந்தப் படம் எடுத்து, வெளியானால், அரசியல் ரீதியில் உதவியாக இருக்கும் என நினைக்கிறார் கமல். அதற்காகவே, இந்த படத்தில், இப்போதைக்கு நடிக்கலாம் என முடிவெடுத்திருக்கிறார்.

இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைக்க வைக்க முடிவெடுத்து, அதற்கான சம்மதத்தையும் பெற்று விட்டனர். இந்த படம் தொடர்பாக, கடந்த வாரம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை, நடிகர் கமல் சந்தித்தும் பேசினார். இதையடுத்தே, நடிகர் கமலுடன் இணைவது மகிழ்ச்சியாக இருக்கிறது என டுவிட்டரில் பதிவிட்டிருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.

ஹிந்தி மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்தப் படம் எடுக்கப்பட இருப்பதால், ஹிந்தி நடிகர்கள் சயீப் அலிகான் மற்றும் அமீர்கானை படத்தில் நடிக்க வைக்கவும் ஒரு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment