மூச்சடங்கிப் போனது தமிழினப் படுகொலையின் நேரடி சாட்சியம்

தமிழினப்படுகொலையின் நேரடி சாட்சியம் ஒன்று மூச்சடங்கிப் போனது. இவ்வாறு தெரிவித்துள்ளது  தமிழர் மரபுரிமைப் பேரவை.

அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளார்  நேற்றையதினம் காலமானார். இவரின் மறைவு தொடர்பில் தமிழர் மரபுரிமைப் பேரவை வெளியிட்ட மறைவு செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த செய்தியில்  தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

இலங்கை அரசினால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் உச்சம் தொட்ட கொடூரங்களில் ஒன்று வலைஞர்மடம் தேவாலயம் மீதான தாக்குதல்.

அத்தாக்குதலில் காயமடைந்து அதன் இரத்த சாட்சியமாக இறுதிவரை குரல் கொடுத்துக் கொண்டிருந்த அருட்தந்தை வண ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளார்  நேற்று இறைபதமடைந்தார். என்ற செய்தி தமிழ் இனத்தை ஆறாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.

1996 இல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்க்கப்பட்டு முல்லைத்தீவு நகரையும் சூழ இருந்த கிராமங்களையும் சேர்ந்த மக்கள் அரசின் உதவிகள் எதுவுமின்றி மீள்குடியமர்ந்து கொண்டிருந்த இடர்மிக்க நாள்களில் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் முல்லைத்தீவின் பங்குத் தந்தையாக பொறுப்பெடுத்தார். 

உட்கட்டுமானங்கள் சிதைக்கப்பட்ட நிலையில் சிங்கள ஏகாதிபதியத்தால் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைக்கும் முகம் கொடுத்துக்கொண்டு மீள்குடியேறிய  மக்களுக்கு மதம் கடந்து  மனிதாபிமான பணிகளை செய்து மக்களின் நேசிப்பை பெற்றார்.

2004 இல் முல்லைத்தீவை கொடூரமாகத் தாக்கிய சுனாமியின் போது தெய்வாதீனமாக உயிர் தப்பிய இவர் சுனாமியால் அனைத்தையும் இழந்து போன மக்களுக்கு ஆற்றிய பணிகள் அளப்பரியன. மதம் கடந்த இவரின் அன்பு செலுத்தல் அனைத்தும் மக்களையும் இவர் பாலீர்த்தது.

2009 இல் முள்ளியவாய்க்காலில் தமிழின அழிப்பு உச்சம் தொட்ட நாள்களில் சிங்கள இராணுவத்தால் அரங்கேற்றப்பட்ட வலைஞர்மடம் தேவாலயத்தின் மீதான திட்டமிட்ட தாக்குதலில் காயமடைந்து முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் இரத்த சாட்சியமாக இறுதி வரை பல தளங்களிலும் தனது சாட்சியை துணிவுடன் பதிவு செய்தவர்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் தலைமையாலும், தளபதிகளாலும், போராளிகளாலும் நேசிக்கப்பட்ட மகத்தான மனிதம் ஒன்று இன்று எம்மிடையே இல்லை. 

அருட்தந்தை வண ஜேம்ஸ் பத்திநாதன் அவர்களுக்கு எமது இறுதி அஞ்சலிகளை செலுத்தி நிற்கின்றோம்.என்றுள்ளது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment