பொலிசாரை தாக்கிய மஞ்சள் ஆடை போராட்டக்காரர்கள்

பிரான்சில் மஞ்சள் ஆடை போராட்டக்காரர்கள் பொலிசார் மீது தாக்குதல் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டனர்.

மஞ்சள் ஆடை போராளிகள் Haute-Marne பகுதியில் தேசிய நெடுஞ்சாலை N4 வீதியினை ஆர்ப்பாட்டக்காரர்கள் முடக்கியிருந்தனர். இதன் காரணமாக பெருமளவில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், மஞ்சள் ஆடை போராளிகளை அங்கிருந்து வெளியேற்ற முயன்றனர். இந்நிலையில் இரு தரப்புக்கும் இடையே மோதல் உண்டானது.

இதில் பொலிஸார்  மூவர் காயமடைந்தனர். அதன் பின்னர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிஸார்  குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் Perthes, Sapignicourt ஆகிய நகரங்களில் தாக்குதல் நடத்திய 14 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
Share on Google Plus

About Editor Jeen

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment