யாழில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் கைது!



யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது இன்று அதிகாலை தமிழகத்தை சேர்ந்த நான்கு மீனவர்கள் படகொன்றில் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது, காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அத்துடன் அவர்களின் படகினையும் பறிமுதல் செய்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் வடக்கு மாகாண நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக காங்கேசன்துறை கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.




Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment