மரக்குற்றிகளுடன் நால்வர் கைது!

சட்ட விரோதமாக முதிரை மரகுற்றிகளை கடத்த முற்பட்டவர்கள் மாமடுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா மாமடுவப் பகுதியில் வைத்து நேற்றிரவு இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பட்டா ரக வாகனத்தில் முதிரை மரகுற்றிகளை கடத்துவதாக மாமடுவ பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மாமடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கெ.செனரத் தலமையிலான பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை மூலம் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சேமமடு பகுதியில் வைத்து 13 முதிரை மரக்குற்றிகளையும், அதனைக் கடத்த பயன்படுத்தப்பட்ட பட்டாரக வாகனத்தையும் பறிமுதல் செய்த பொலிஸார், சந்தேகநபர் நால்வரையும் கைது செய்தனர்.

Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment