மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், ஆறுகால் மடத்தடிப் பகுதியில் நேற்றுக் காலை வீதியைக் கடக்க முற்பட்ட முதியவர் மோட்டார் சைக்கிள் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த திரவியம் வியஜராச என்னும் குடும்பஸ்தரே சாவடைந்தவராவார்.

 யாழ்ப்பாணத்தில் இருந்து மானிப்பாய் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளே முதியவர் மீது  மோதியுள்ளது. 

சம்பவ இடத்திற்கு வந்த யாழ்.பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 



Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment