லசந்­த­வைக் கொன்­ற­வரை- கோத்­தா­வுக்­குத் தெரி­யு­ம்!

சண்டே லீடர் ஆசி­ரி­யர் லசந்த விக்கி­ர­ம­துங்­க வைப் படு­கொலை செய்­தது யார் என்று தனக்­குத் தெரி­யும் என்­றும், ஆனால் அதற்கு ஆதா­ரம் இல்லை என்­றும் இலங்­கை­யின் முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்ச தெரி­வித்­துள்­ளார்.
சிங்­கள வார­இ­தழ் ஒன்­றுக்கு அளித்­துள்ள செவ்­வி­யி­லேயே அவர் இத­னைக் கூறி­யுள்­ளார்.
‘லசந்த கொலை­யாளி யார் என்­பது அனை­வ­ருக்­கும் தெரி­யும். ஆனால், எவ­ரும் முறை­யான விசா­ர­ணை­களை நடத்தி குற்­ற­வா­ளி­யைத் தண்­டிக்­கத் தயா­ராக இல்லை. குற்­ற­வா­ளி­க­ளைத் தண்­டிப்­ப­தற்கு அர­சுக்கு நல்ல வாய்ப்பு உள்­ளது. அவர்­கள் பொய் சொல்­கி­றார்­கள். தனது தந்­தை­யைக் கொலை செய்­த­வர் யார் என்று அறிய வேண்­டு­மா­னால், லசந்­த­வின் மகள் இலங்கை வந்து என்­னைச் சந்­திக்க வேண்­டும். என்ன நடந்­தது என்று நான் அவ­ருக்கு கூறு­வேன். ஆனால் அதனை நீதி­மன்­றத்­தில் நிரூ­பிப்­ப­தற்கு என்­னி­டம் ஆதா­ரம் இல்லை. அந்­தக் கட்­டத்­தி­லேயே நாங்­கள் விசா­ர­ணையை நிறுத்­தி­னோம்’ என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment