மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு

மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று (புதன்கிழமை) இரண்டாவது நாளாகவும்  போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் நேற்றிலிருந்து 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தையும் ஆரம்பித்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் அனைத்து அரசு ஊழியர்கள், போக்குவரத்து கழக தொழிலாளர்கள், வங்கி ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.

மேலும், இந்த போராட்டத்துக்கு ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் 15 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்த போராட்டத்தின்போது மேற்கு வங்கம், கேரளா, பிஹார் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அங்கு கடைகள், வணிக வளாகங்கள், பாடசாலைகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. வாகன போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

Share on Google Plus

About Editor Jeen

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment