சீன குடியிருப்பு கட்டடத்தில் வெடிப்பு

வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்திலுள்ள தலியான் நகரின் குடியிருப்பு கட்டடமொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.குடியிருப்பு கட்டடத்தின் நான்காவது மாடியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இவ்வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வெடிப்பு சம்பவத்தை அடுத்து ஏற்பட்ட தீப்பரவலை சுமார் இரண்டு மணிநேர போராட்டத்தின் பின்னர் தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், குறித்த குடியிருப்பிலுள்ள அனைவரும் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெடிப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
Share on Google Plus

About Editor Jeen

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment