கொல்லப்பட்ட கணவன் மகனாக பிறந்த நெகிழ்ச்சி!

தெலங்கானா மாநிலத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரனாய் என்ற இளைஞர் தனது காதல் மனைவியின் கண்முன்னே வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பிரனாய் - அம்ருதா ஆகிய இருவரும் பள்ளியில் இருந்தே காதலித்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டனர்.
பிரனாய் தாழ்ந்த சாதியை சேர்ந்தவர் என்பதால், அம்ருதாவின் பெற்றோருக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை.
இந்த, 5 மாத கர்ப்பிணியாக இருந்த அம்ருதாவின் கன்முன்ணே கடந்த ஆண்டு செப்டம்பர் 14 ஆம் திகதி பிரனாய் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக, அம்ருதாவின் தந்தை மற்றும் கொலையை செய்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்து 5 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அம்ருதாவிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து அம்ருதா கூறியதாவது, பிரனாய் என்னை அதிகமாக நேசிக்கிறான், இதனால் மீண்டும் எனக்கு மகனாக பிறந்து என்னுடன் இணைந்துவிட்டார் என கூறியுள்ளார்.


Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment