பெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு

பெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவம் யாழ்ப்பாணம் நாவந்துறைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் ஏற்கனவே பெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த போது,  பெண் குறித்த நபரது கையைக் கடித்து அவரிடமிருந்து  தப்பித்தார். 

கடத்த முயற்சித்த நபரது மோட்டார் சைக்கிள் இலக்கத்தை அவதானித்த கிராம மக்கள் இன்று அதே இடத்துக்கு வருகை தந்த நபரை மடக்கிப் பிடித்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment