ராஜபக்ஸ குடும்பத்தினருக்கு எதிராக கொழும்பில் போராட்டம்!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமைக்கு ராஜபக்ஸ குடும்பத்தினரே காரணமென பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக எக்னெலிகொடவின் மனைவி, நேற்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்திருந்தார். இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தனது கணவர் காணாமலாக்கப்பட்டமைக்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும்,  முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவுமே பொறுப்புக்கூற வேண்டும் எனவும் தனது கணவர் காணாமல் ஆக்கப்பட்மை தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற போதிலும் நீதி கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தீப்பந்தங்களை ஏந்தியும், காளி தேவி வழிபாட்டிலும் ஈடுப்பட்டு போராட்டத்தை நடத்தியுளளார்.



Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment