மலேரியா நோயை இனங்காண விசேட செயற்றிட்டம்!

சியம்பலாண்டுவ பகுதியில் மலேரியா நோயை இனங்காணுவதற்கு விசேட செயற்றிட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக, மலேரியா நோய் தடுப்புப்பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மலேரியா நோயின் தாக்கம் சியம்பலாண்டுவ பகுதியில் அதிகரித்துள்ளதாக வெளியாகிய தகவல் தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் மலேரியா நோய் ஏற்பட்டுள்ளமையை கண்டறியும் பொருட்டு அப்பகுதியிலுள்ள மக்களை  இரத்தப் பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றோம். இதனூடாக மலேரியா நுளம்பின் பாதிப்பு உள்ளதா என்பது தொடர்பில் கண்டறிய முடியும்.
ஆனால் இதுவரையும் சியம்பலாண்டுவ பகுதியில் யாரும் மலேரியா தாக்கத்திற்கு உட்பட்டுள்ளமை கண்டறியப்படவில்லை.
இதேவேளை டெங்கு நுளம்பு பரவும் வாய்ப்பு இப்பகுதிகளில் உள்ளதா என்பது தொடர்பிலும் தற்போது கவனம் செலுத்தியுள்ளோம்” என ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment