வட கொரியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான பேச்சுவார்த்தை


கிம் ஜோங் உன்னுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு இடமொன்றை தேடி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் ஜூன் மாதம் வட கொரியா ஜனாதிபதி மற்றும் அமெரிக்க ஜனாதிபதிக்கு இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இதேவேளை, இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்காக வட கொரிய ஜனாதிபதி, அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், வட கொரியா மீது சுமத்தப்பட்டுள்ள தடைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்
Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment