வர்த்தக நிலைய உரிமையாளர் சடலமாக மீட்பு

வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். 

68 வயதுடைய முதியவர் ஒருவரே வர்த்தக நிலையத்தினுள் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் அம்பலாந்தொட்டை, கந்தேகொட சந்தி பிரதேசத்தில் நடந்துள்ளது.

இனந்தெரியாத ஒருவர் வர்த்தக நிலையத்தின் பின்பக்க கதவை உடைத்துக் கொண்டு உள்நுழைந்ததற்கான தடையங்கள் காணப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment