சம்பியனானார் ஒசாகா!

2019 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாக செக்குடியரசின் கிவிடோவாவை வீழ்த்தி சம்பியன் ஆனானர்.

சுமார் 2 மணி 27 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 7–6 (7–2), 5–7, 6–4 என்ற செட் கணக்கில் கிவிடோவாவை சாய்த்து அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை ஒசாக முதன் முறையாக கைப்பற்றியுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம், உலக தரவரிசையில் 4 ஆவது இடத்தில் இருந்த ஒசாகா ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்துள்ளார். 
இதேவேளை ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் ‘நம்பர் ஒன்’ வீரரும், 6 முறை சாம்பியனுமான நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா), 2 ஆம் நிலை வீரரும், 2009 ஆம் ஆண்டு சாம்பியனுமான ரபெல் நடாலும் (ஸ்பெயின்) மோதுகிறார்கள். 
இவர்கள் இருவரும் இதுவரை 52 முறை நேருக்கு நேர் மோதியிருக்கிறார்கள். இதில் 27 இல் ஜோகோவிச்சும், 25 இல் நடாலும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment