இராணுவத்தால் தாக்கப்பட்ட இளைஞன் கைது

இராணுவ முகாமுக்கு முன்பாக இளைஞர் ஒருவர் இராணுவத்தினால் தாக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் வவுனியா, ஈச்சங்குளம் நேற்று இரவு நடந்துள்ளது.

வவுனியா, கல்மடு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே தாக்கப்பட்டுள்ளார்.

ஈச்சங்குளம் இராணுவ முகாம் முன்பாகவுள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடி விட்டு, அதன் முன்னால் இராணுவம் நடத்தும் சிற்றுண்டிச் சாலைக்குச் குறித்த இளைஞர் சென்றிருக்கிறார்.

அங்கு நின்ற சிப்பாய் ஒருவருக்கும், இளைஞனுக்கும் இடையில் வாய்த் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து அங்கு நின்ற இராணுவத்தினர் ஒன்றிணைந்து தன் மீது தாக்குதல் நடத்தியதாகப் பாதிக்கப்பட்ட இளைஞன் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்த ஈச்சங்குளம் பொலிஸார் குறித்த இளைஞனைக் கைது செய்தனர்.

இராணுவத்தினர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் பாதிக்கப்பட்ட இளைஞனின் தாயார் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்குள்ளான இளைஞன் ஈச்சங்குளம் பொலிஸாரால் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பின்னர் மீண்டும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment