காலிமுகத்திடலில் சுதந்திரதின விழா


இலங்கையின் 71 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு காலிமுகத்திடலில் இடம்பெற்றது.

இதில  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரது  பாரியார் சகிதம் வருகை தந்தார்.

இதன்போது , ஜனாதிபதியால் தேசிய கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவ மாணவிகளால் தேசிய கீதமும் பாடப்பட்டது.

 நிகழ்வில் மாலைத்தீவின் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி சிறப்பு அதிதியாக அழைக்கப்பட்டிருந்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க , அமைச்சர்கள் ,நாடாளுமன்ற உறுப்பினர்கள் , மதத்தலைவர் மற்றும் வௌிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட விருந்தினர்களின் பங்கேற்புடன் 71வது தேசிய சுதந்தர தின நிகழ்வு தற்போதைய நிலையில் காலிமுகத்திடலில் இடம்பெற்று வருகின்றது.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment