கைதடி வளர்மதியை வீழ்த்தியது சுதுமலை நாவலர்

100 ஆவது அரியாலை சுதேசிய திருநாட்ட கொண்டாட்ட விழாவை முன்னிட்டு வட மாகாண ரீதியாக நடத்தப்பட்ட தாச்சிப் போட்டித் தொடரில் சுதுமலை நாவலர் விளையாட்டுக் கழக அணி வெற்றி பெற்றது.

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய மைதானத்தில் மின் ஒளியில் நேற்று  மாலை  இடம் பெற்ற ஆட்டத்தில் கைதடி வளர்மதி விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து சுதுமலை நாவலர் விளையாட்டுக்கழக அணி மோதியது.

முதற் பாதி ஆட்ட முடிவில் சுதுமலை நாவலர் விளையாட்டுக் கழக அணி 4 : 1 என்ற புள்ளி அடிப்படையில் முன்னிலை  வகித்தது.

இரண்டாம் பாதி ஆட்ட முடிவில் சுதுமலை நாவலர் விளையாட்டுக் கழக அணி 3 : 1 என்ற புள்ளி அடிப்படையில் முன்னிலை பெற்றது.

ஆட்ட நிறைவில் சுதுமலை நாவலர் விளையாட்டுக் கழக அணி 7:2 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி பெற்றது.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment