சரஸ்வதி மகா வித்தியாலய மெய்வல்லுனர் போட்டி

மட்டக்களப்பு மாங்காடு, சரஸ்வதி மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர்  போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.

வித்தியாலய முதல்வர் திருமதி.தவமணிதேவி குணசேகரம் தலைமையில் விளையாட்டுப்போட்டி நடந்தது.

இதில், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக செயலர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந், பட்டிருப்பு கல்வி வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் ந.நேசகஜேந்திரன், மண்முனை தென் எருவில் பற்று உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.சத்தியகௌரி தரணிதரன், கோட்டக்கல்வி அதிகரி த.அருள்ராசா, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் த.ஜெயச்சந்திரன், மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.




Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment