தலைமன்னார் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு!

மன்னார்  2 ஆம் கட்டை பகுதியில் உள்ள புதிய குடியிறுப்பு பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் பெரிய கருஸல் கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது ஜே.ரமீஸ் (வயது-23) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, 2 ஆம் கட்டை பகுதியில் நீர் குழாய் இணைப்பு பணிகளை ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த பகுதியில் பயணித்த இளைஞன்,  பெக்கோ (ஜே.சி.பி) ரக வாகனத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளார்.

காயமடைந்த குறித்த இளைஞனை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மன்னார் பொலிஸார் குறித்த பெக்கோ (ஜே.சி.பி) வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதோடு, மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.



Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment