மீன் இறக்குமதியை மட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக, கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சு தீர்மானித்துள்ளது.
உள்நாட்டு மீனவர்கள் மற்றும் மீன்பிடித்துறையை பாதுகாக்கும் நோக்கில் இவ்வாறான தீர்மானத்தை எடுத்துள்ளதாக, அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் தொடக்கம் டிசெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் மீன் இறக்குமதியை மட்டுப்படுத்தும் செயற்பாட்டை துரிதப்படுத்தவுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
0 comments:
Post a Comment