முழுமையாக முடங்கியது வட மாகாணம்!



வட மாகாணம் முழுவதும் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருவதால் அனைத்து விதமான சேவைகளும் முடங்கியுள்ளன.
மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களில் காலை முதல் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அரச சேவைகள், போக்குவரத்து, பாடசாலை என பல்வேறு பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளது.
அனைத்து வரத்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ளதுடன், சேவை சந்தையில் கறுப்பு கொடி கட்டப்பட்டு கர்த்தால் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளிற்கு மாணவர்கள் வருகை தராமையால் பாடசாலை வெறிச்சோடி காணப்படுவதுடன், எவ்வித கற்றல் செயற்பாடுகளும் இடம்பெறவில்லை.
அரச, தனியார் போக்குவரத்து சேவைகளும் முழுமையாக பாதிப்படைந்துள்ளன. வட மாகாணத்தின் பிரதான வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
காணாமல் ஆக்கப்பட்டடோர் விடயம், போர்க் குற்றங்களுக்கு பொறுப்பு கூறவேண்டும் போன்ற பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இலங்கை அரசுக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டது. எதிர்வரும் மாதத்துடன் இரண்டு வருடங்கள் முடிவடைய இருக்கின்றது. ஆனால் எவையும் நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. பேரவையின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டத்துக்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment