பேருந்து விபத்தில் 15 பேர் காயம்

பேருந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் 15 பேர் காயமடைந்தனர்.

பதுளை - இரத்தினபுரி பிரதான வீதியில் பெல்மடுல்ல பகுதியில் நேற்று இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

தனியார் பேருந்து ஒன்றும், சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்துமே  இவ்வாறு விபத்திற்குள்ளானது.

விபத்தில் பல்கலைக்கழக மாணவர்களே சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில், பெல்மடுல்லை மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று அங்கிருந்து வெளியேறியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment